
இஸ்லாமிய நாகரிகம் – சென்னை
” இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.
படித்த இளைஞர்களும் மதரசா மாணவர்களும் தங்களது முன்னோர்களின் வாழ்வையும் காலச்சார மரபுகளையும் அறிந்து அதன் நிழலில் தங்களுக்கான எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொள்ள ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பள்ளிப்பருவத்தில் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய இந்த வாழ்வியல் பாடம் இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு இந்த இரண்டுநாள் பயிலரங்கத்தில் கிடைத்ததாக குறிப்பிட்டனர்.
முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய வரலாறும் நாகரிக மரபுகளும் பயிற்றுவிக்கப்படுவது அதிகரித்தால் இளைஞர்கள் ஒருபோதும் வழிதவற மாட்டார்கள்.
வாழ்வில் எவ்வளவு உச்சநிலைக்கு சென்றாலும் தன் கலாச்சாரத்தையும் தன்மீதுள்ள சமூகப் பொறுப்புகளையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.








